என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகல்
Byமாலை மலர்17 July 2019 10:44 AM GMT (Updated: 17 July 2019 10:44 AM GMT)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து தலைமை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக். கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவராக பதவியேற்றார். உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட பின், போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் சில மாற்றங்களை செய்தார். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழும்பியது.
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
ஏமாற்றத்தோடு பாகிஸ்தான் அணி சொந்த நாடு திரும்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இன்சமாம் உல் ஹக்கின் பதவிக்காலம் வருகிற 31-ந்தேதி வரை இருக்கிறது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்சமாம் உல் ஹக் இதுகுறித்து கூறுகையில் ‘‘கிரிக்கெட் என்னுடைய பேரார்வம். ஆனால், தேர்வுக்குழு தொடர்பான பணியில் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை. துரதிருஷ்டவசமாக தொடக்க போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அது கடைசி கட்ட போட்டிகளின்போது ரன்ரேட்டை சீராக கொண்டு வர தடையாக அமைந்து விட்டது’’ என்றார்.
இவர் தேர்வு செய்த அணிதான் 2017-ல் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
ஏமாற்றத்தோடு பாகிஸ்தான் அணி சொந்த நாடு திரும்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இன்சமாம் உல் ஹக்கின் பதவிக்காலம் வருகிற 31-ந்தேதி வரை இருக்கிறது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்சமாம் உல் ஹக் இதுகுறித்து கூறுகையில் ‘‘கிரிக்கெட் என்னுடைய பேரார்வம். ஆனால், தேர்வுக்குழு தொடர்பான பணியில் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை. துரதிருஷ்டவசமாக தொடக்க போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அது கடைசி கட்ட போட்டிகளின்போது ரன்ரேட்டை சீராக கொண்டு வர தடையாக அமைந்து விட்டது’’ என்றார்.
இவர் தேர்வு செய்த அணிதான் 2017-ல் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X