என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிற்சியாளர்கள் பதவிக்கு இவர்களை குறி வைக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Byமாலை மலர்17 July 2019 9:47 AM GMT (Updated: 17 July 2019 9:47 AM GMT)
தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கல்லீஸ் விலகிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சரியான நபரை நியமிக்க தீவிரம் காட்டி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் கல்லீஸ். பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் சைமன் காடிச் செயல்பட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் தங்களது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய பயிற்சியாளர்களை தேடிவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து அணிக்கு பெய்லிஸ் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஆஷஸ் தொடரோடு முடிவடைகிறது. அதன்பின் பெய்லிஸ் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
அத்துடன் நியூசிலாந்தைச் சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர். ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் விளாசி சிறப்பைப் பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 5 வருடங்கள் இருந்துள்ளார். அந்த அணியைப் பற்றி நன்றாக தெரியும் என்பதால் அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளது.
பெய்லிஸ் இதற்கு முன் நான்கு வருடங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது 2012 மற்றும் 2014 சீசனில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய பயிற்சியாளர்களை தேடிவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து அணிக்கு பெய்லிஸ் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஆஷஸ் தொடரோடு முடிவடைகிறது. அதன்பின் பெய்லிஸ் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேகேஆர் பெய்லிசை தலைமை பயிற்சியாளராக நியமிக்க விரும்புகிறது. ஒருவேளை இங்கிலாந்து அணியின் பயற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனில், பெய்லிசை அடித்த நொடியே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்து விடும்.
அத்துடன் நியூசிலாந்தைச் சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர். ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் விளாசி சிறப்பைப் பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 5 வருடங்கள் இருந்துள்ளார். அந்த அணியைப் பற்றி நன்றாக தெரியும் என்பதால் அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளது.
பெய்லிஸ் இதற்கு முன் நான்கு வருடங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது 2012 மற்றும் 2014 சீசனில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X