என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூனியர் கிரிக்கெட் - சென்னை மாணவர் இரட்டை சதம்
Byமாலை மலர்17 July 2019 7:30 AM GMT (Updated: 17 July 2019 7:30 AM GMT)
பள்ளி அணிகள் இடையேயான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் சென்னை மாணவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
பள்ளி அணிகள் இடையேயான ஜூனியர் கிரிக்கெட் போட்டி (12 வயதுக்குட்பட்டோர்) நந்தனம் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன.
இதன் ‘லீக்’ ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்ஸ்- செயின்ட் பேட்ரிக்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய செயின்ட் பீட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்தது.
அந்த அணி வீரர் டி.சைலேஷ் தேவ் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 93 பந்துகளில் 204 ரன் குவித்தார். இதில் 43 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
பின்னர் ஆடிய செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 26 ஓவர்களில் 111 ரன்னில் சுருண்டது. இதனால் செயின்ட் பீட்ஸ் பள்ளி 201 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X