என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்?
Byமாலை மலர்16 July 2019 5:09 AM GMT (Updated: 16 July 2019 5:09 AM GMT)
இங்கிலாந்து அணியின் வீரரான பென் ஸ்டோக்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க இருப்பதாக கூறியுள்ளார். யாரை சொல்கிறார் என்பதை பார்ப்போம்.
உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் குவித்தது.
எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன.
சூப்பர் ஓவரும் டிராவானதால் பவுண்டரிகள் கணக்கிடப்பட்டன. இதில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியைவிட அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் உலக கோப்பையை கைப்பற்றியது.
கடைசி ஓவரில், பென் ஸ்டோக்ஸ் போல்ட்டின் பந்தை அடித்து, இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது, தாவி கிரீசில் விழுந்தார். மார்டின் குப்தில் வீசிய பந்து பேட்டில் பட்டு மீண்டும் பவுண்டரிக்கு சென்றது.
இதற்காக ஸ்டோக்ஸ், நியூசிலாந்து அணியினரிடம் மைதானத்தில் உடனடியாக மன்னிப்பு கேட்டார். இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. அணியில் உள்ள அனைவரின் கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்தது அற்புதமான உணர்வாக உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது மிகச்சிறப்பான போட்டியாக அமைந்தது. நான் என் வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த வெற்றி எங்களுக்கு நடக்க வேண்டும் என்று நட்சத்திரங்களில் முன்பே எழுதப்பட்டுள்ளது' என கூறினார். இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X