என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் கொடுத்த கட்டாய அட்வைஸ் -என்ன?
Byமாலை மலர்16 July 2019 4:23 AM GMT (Updated: 16 July 2019 4:26 AM GMT)
நியூசிலாந்தில் குழந்தைகள் இனி இதை செய்ய வேண்டாம் என ஜிம்மி நீசம் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.அது என்ன என்பதை பார்ப்போம்.
உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 241 ரன்கள் குவித்தது. அதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் குவித்தது.
எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி, அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் வெற்றிப் பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகள் அடித்திருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்திருந்தது. பவுண்டரிகள் அதிகம் அடித்ததால் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.
இந்த விதியை சுட்டிக் காட்டும் விதமாகவே ஜிம்மி நீசம் தோல்வியின் விரக்தியில் பேசியுள்ளார் என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ஐசிசியின் இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி, அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் வெற்றிப் பெற்றது.
இது குறித்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீசம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'குழந்தைகளே இனி நீங்கள் யாரும் விளையாட்டை உங்கள் துறையாக தேர்வு செய்ய வேண்டாம். பேக்கிங்கோ அல்லது வேறு துறையையோ தேர்ந்தெடுங்கள்' என பதிவிட்டுள்ளார்.
Kids, don’t take up sport. Take up baking or something. Die at 60 really fat and happy.
— Jimmy Neesham (@JimmyNeesh) July 15, 2019
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகள் அடித்திருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்திருந்தது. பவுண்டரிகள் அதிகம் அடித்ததால் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.
இந்த விதியை சுட்டிக் காட்டும் விதமாகவே ஜிம்மி நீசம் தோல்வியின் விரக்தியில் பேசியுள்ளார் என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ஐசிசியின் இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X