என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனி இல்லை என்றால்.. -ஸ்டீவ் வாக் சொன்னது என்ன?
Byமாலை மலர்13 July 2019 7:37 AM GMT (Updated: 13 July 2019 7:37 AM GMT)
இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்.
உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய டோனியின் ரன் அவுட் தான் மிக முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ஜீனியஸ் நிச்சயம் டோனிதான். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணியை வெற்றிப் பெற வைத்திருப்பார்.
நான் இன்னும் அவரை நம்புகிறேன். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி வென்றுக் கொடுத்துள்ளார். அனைத்துப் போட்டிகளிலுமே ஒரே மாதிரியான ஆட்டத்தைதான் வெளிப்படுத்துகிறார்.
டோனி இல்லை என்றால் பல போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஒருநாள் போட்டிகளில் சேசிங்கில் மற்றவர்களைவிட அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். விராட் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை.
அதேபோல் நியூசிலாந்து அணியும் சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சனும், ராய் டெய்லரும்தான் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ஜீனியஸ் நிச்சயம் டோனிதான். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணியை வெற்றிப் பெற வைத்திருப்பார்.
நாம் அனைவரும் அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக இல்லை என்றால், அவர் என்ன செய்கிறார் என நீங்கள் சந்தேகப்பட்டிருக்க மாட்டீர்கள். மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை அனைவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கிறார்.
நான் இன்னும் அவரை நம்புகிறேன். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி வென்றுக் கொடுத்துள்ளார். அனைத்துப் போட்டிகளிலுமே ஒரே மாதிரியான ஆட்டத்தைதான் வெளிப்படுத்துகிறார்.
டோனி இல்லை என்றால் பல போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஒருநாள் போட்டிகளில் சேசிங்கில் மற்றவர்களைவிட அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். விராட் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை.
அதேபோல் நியூசிலாந்து அணியும் சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சனும், ராய் டெய்லரும்தான் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X