என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்
Byமாலை மலர்9 July 2019 10:00 AM GMT (Updated: 9 July 2019 10:00 AM GMT)
ராகுல் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் டிராவிட், ஓய்வு பெற்ற பிறகு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
திறமை வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் தார்மீக பொறுப்பை டிராவிட் சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமனம் செய்துள்ளது.
இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய கிரிக்கெட் அகாடமியை 2000-ம் ஆண்டு உருவாக்கியது. தற்போது அந்த அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி வழங்குவது, ஆலோசனை வழங்குவது, வீரர்களை ஊக்கப்படுத்துவது, ஊழியர்கள் தேர்வு என தேசிய கிரிக்கெட் அகாடமியின் முழு பொறுப்பையும் ராகுல் டிராவிட் ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா ஏ அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கும் டிராவிட் ஆலோசனை வழங்குவார் என்றும், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பயிற்சியாளர்களுடனும் டிராவிட் இணைந்து பங்களிப்பார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
தலைமை பயிற்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவர் பொறுப்பாவார் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
திறமை வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் தார்மீக பொறுப்பை டிராவிட் சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமனம் செய்துள்ளது.
இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய கிரிக்கெட் அகாடமியை 2000-ம் ஆண்டு உருவாக்கியது. தற்போது அந்த அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி வழங்குவது, ஆலோசனை வழங்குவது, வீரர்களை ஊக்கப்படுத்துவது, ஊழியர்கள் தேர்வு என தேசிய கிரிக்கெட் அகாடமியின் முழு பொறுப்பையும் ராகுல் டிராவிட் ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா ஏ அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கும் டிராவிட் ஆலோசனை வழங்குவார் என்றும், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பயிற்சியாளர்களுடனும் டிராவிட் இணைந்து பங்களிப்பார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
தலைமை பயிற்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவர் பொறுப்பாவார் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X