search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போபண்ணா குயவாஸ்
    X
    போபண்ணா குயவாஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தோல்வி

    விம்பிள்டன் டென்னிஸில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
    விம்பிள்டன் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா - பப்லோ குயவாஸ் (உருகுவே) ஜோடி - வெஸ்லே கூல்ஹோப் (நெதர்லாந்து) - மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் போபண்ணா ஜோடி 4-6, 4-6, 6-4, 6(7)-7(9) என தோல்வியடைந்து வெளியேறியது. முதல் இரண்டு செட்டுகளையும் எளிதாக இழந்த போபண்ணா ஜோடி, 3-வது சுற்றில் சிறப்பாக விளையாடியது. அதன்மூலம் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றியது.

    4-வது செட்டில் கடுமையாக போராடியது. இதனால் 4-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 6(7)-7(9) என தோல்வியடைந்து வெளியேறியது.
    Next Story
    ×