search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா - மீனா கலந்துரையாடல்
    X
    ரோகித் சர்மா - மீனா கலந்துரையாடல்

    சிக்சரால் காயப்பட்ட ரசிகை... நோட் பண்ணி பரிசளித்த ரோகித் -நெகிழ்ச்சி தருணம்

    உலக கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் அடித்த சிக்சரில் பந்து, பெண் ரசிகையின் மேல் விழுந்து காயமடைந்தார். இதனை கவனித்து அவரை சந்தித்து ரோகித் பரிசளித்துள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேற்று வங்காள தேசத்துடன் மோதியது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரரான ரோகித் சர்மா சதம் அடித்து சிறப்பாக ஆடினார்.

    உலக கோப்பை தொடங்கியது முதலே, ரோகித் சர்மா ஃபுல் பார்மில் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.

    ரோகித் ஷர்மா, மீனாவுக்கு பரிசளித்த காட்சி

    இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து விளாசினார். போட்டியின் இறுதியில் ஆட்டநாயகனாகவும் ரோகித் தேர்வு செய்யப்பட்டார்.

    அவர் சிக்சர் அடித்தபோது ஒருமுறை பந்து, மைதானத்தில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த மீனா எனும் ரசிகை மேல் விழுந்தது. லேசாக காயமடைந்தார். இதனை ரோகித் கவனித்துவிட்டார்.  போட்டி முடிந்தவுடன் மீனாவை சந்தித்தார் ரோகித்.

    மீனாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் சிறிது நேரம் கலகலப்பாக உரையாடிவிட்டு கையெழுத்திட்ட தொப்பி ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 
    Next Story
    ×