என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிக்சரால் காயப்பட்ட ரசிகை... நோட் பண்ணி பரிசளித்த ரோகித் -நெகிழ்ச்சி தருணம்
Byமாலை மலர்3 July 2019 4:40 AM GMT (Updated: 3 July 2019 4:40 AM GMT)
உலக கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் அடித்த சிக்சரில் பந்து, பெண் ரசிகையின் மேல் விழுந்து காயமடைந்தார். இதனை கவனித்து அவரை சந்தித்து ரோகித் பரிசளித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேற்று வங்காள தேசத்துடன் மோதியது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரரான ரோகித் சர்மா சதம் அடித்து சிறப்பாக ஆடினார்.
அவர் சிக்சர் அடித்தபோது ஒருமுறை பந்து, மைதானத்தில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த மீனா எனும் ரசிகை மேல் விழுந்தது. லேசாக காயமடைந்தார். இதனை ரோகித் கவனித்துவிட்டார். போட்டி முடிந்தவுடன் மீனாவை சந்தித்தார் ரோகித்.
மீனாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் சிறிது நேரம் கலகலப்பாக உரையாடிவிட்டு கையெழுத்திட்ட தொப்பி ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
உலக கோப்பை தொடங்கியது முதலே, ரோகித் சர்மா ஃபுல் பார்மில் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித், 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து விளாசினார். போட்டியின் இறுதியில் ஆட்டநாயகனாகவும் ரோகித் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் சிக்சர் அடித்தபோது ஒருமுறை பந்து, மைதானத்தில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த மீனா எனும் ரசிகை மேல் விழுந்தது. லேசாக காயமடைந்தார். இதனை ரோகித் கவனித்துவிட்டார். போட்டி முடிந்தவுடன் மீனாவை சந்தித்தார் ரோகித்.
மீனாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் சிறிது நேரம் கலகலப்பாக உரையாடிவிட்டு கையெழுத்திட்ட தொப்பி ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X