என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹர்திக் பாண்டியாவை உலகத்தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக மாற்றுவேன்: பாகிஸ்தான் வீரர் சொல்கிறார்
Byமாலை மலர்28 Jun 2019 10:36 AM GMT (Updated: 28 Jun 2019 10:36 AM GMT)
பல குறைகளை கொண்டுள்ள ஹர்திக் பாண்டியாவை என்னிடம் விட்டுவிடுங்கள். அவரை உலகத்தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக மாற்றி காட்டுகிறேன் என பாகிஸ்தான் வீரர் ரசாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உள்ளார். கபில் தேவ்-க்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டரை இந்தியா கண்டுபிடித்துள்ளது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராகலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக், ஹர்திக் பாண்டியாவை தலைசிறந்த வீரராக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்துல் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை கூர்ந்து கவனித்தேன். அவர் பந்தை ஆடுகளத்தில் மிகவும் கடுமையாக ஹிட் செய்யும்போது உடலை பேலன்ஸ் செய்யும்போது பல தவறுகள் உள்ளது.
அவரது புட்வொர்க்கை பார்க்கும்போது, அது சில நேரங்களில் அவரை கீழே தள்ளிவிடுகிறது. அவருக்கு என்னால் பயிற்சி அளிக்க முடியும் என்று உணர்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் தொடர்பான பிரச்சனை இருப்பதால், ஐக்கிய அரவு எமிரேட்ஸில் பயிற்சி கொடுக்கலாம்.
ஹர்திக் பாண்டியாவை என்னால் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக மாற்ற முடியும். பிசிசிஐ அவரை சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக்க விரும்பினால், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராகலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக், ஹர்திக் பாண்டியாவை தலைசிறந்த வீரராக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்துல் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை கூர்ந்து கவனித்தேன். அவர் பந்தை ஆடுகளத்தில் மிகவும் கடுமையாக ஹிட் செய்யும்போது உடலை பேலன்ஸ் செய்யும்போது பல தவறுகள் உள்ளது.
அவரது புட்வொர்க்கை பார்க்கும்போது, அது சில நேரங்களில் அவரை கீழே தள்ளிவிடுகிறது. அவருக்கு என்னால் பயிற்சி அளிக்க முடியும் என்று உணர்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் தொடர்பான பிரச்சனை இருப்பதால், ஐக்கிய அரவு எமிரேட்ஸில் பயிற்சி கொடுக்கலாம்.
ஹர்திக் பாண்டியாவை என்னால் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக மாற்ற முடியும். பிசிசிஐ அவரை சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக்க விரும்பினால், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X