search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோக்கியோ ஒலிம்பிக்- மைதானங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை அனுமதிக்க முடிவு
    X

    டோக்கியோ ஒலிம்பிக்- மைதானங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை அனுமதிக்க முடிவு

    டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது, மைதானங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்வதை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும், அதன்பின்னர் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்படுகின்றன.

    விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சமீபத்திய போட்டிகளின்போது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைதானங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் உள்ளிட்ட எந்த திரவப்பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது என பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.



    ஆனால், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது ஜப்பானில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    அதன்  ஒரு பகுதியாக, ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை கொண்டு செல்வதை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு குறிப்பிட்ட சில நிபந்தனைகளையும் விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×