என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியின் ஜெர்சி நிறம் கவலை இல்லை.. நீலநிறமே எங்களுக்கு முக்கியம் -பாரத் அருண்
Byமாலை மலர்27 Jun 2019 4:45 AM GMT (Updated: 27 Jun 2019 4:45 AM GMT)
இந்திய அணியின் ஜெர்சி நிறம் குறித்து எவ்வித கவலையும் இல்லை எனவும், நீலநிறம்தான் முக்கியம் எனவும் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.
1992ம் ஆண்டு முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வண்ண சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அன்று முதல் தற்போது வரை நீல நிற சீருடை அணிந்தே இந்திய அணி களம் காண்கிறது. இதனால் இந்திய அணியை 'Men In Blue' என செல்லமாக அழைப்பதும் உண்டு.
உலக கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீல நிற உடையில் விளையாடி வருகின்றனர். நீல நிறம் தான் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும்.
அந்த வகையில் ஜூன் 30ம் தேதி இங்கிலாந்துடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர் பாரத் அருண் நேற்று கூறுகையில், ‘எந்த நிற ஜெர்சி அணியப்போகிறோம் என எங்களுக்கு தெரியாது. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டி குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
போட்டியில் கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம். நாங்கள் நீல நிறத்தில்தான் இருக்கிறோம். நீல நிறம்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ என கூறியுள்ளார்.
உலக கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீல நிற உடையில் விளையாடி வருகின்றனர். நீல நிறம் தான் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும்.
நடப்பு உலக கோப்பை தொடரில் ஐசிசி புதிய விதியை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்றும், அப்படி விளையாடுவதால் வீரர்களின் அணிகளை சரியாக கணக்கிட முடியாது என்பதால் சீருடை மாற்றப்படுகிறது என குறிப்பிட்டது.
அந்த வகையில் ஜூன் 30ம் தேதி இங்கிலாந்துடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர் பாரத் அருண் நேற்று கூறுகையில், ‘எந்த நிற ஜெர்சி அணியப்போகிறோம் என எங்களுக்கு தெரியாது. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டி குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
போட்டியில் கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம். நாங்கள் நீல நிறத்தில்தான் இருக்கிறோம். நீல நிறம்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X