search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்
    X

    டி20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்

    கடந்த வாரம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த யுவராஜ், வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளில் விளையாட அனுமதி கோரியுள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கியவர் யுவராஜ் சிங். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் எனவும் கூறியிருந்தார்.

    பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து விலகியுள்ளதால், வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளில் விளையாட முடிவு செய்தார். இதுகுறித்து பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்பேன் என்று தெரிவித்தார். மேலும், ஐபில் தொடரில் விளையாட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார். இதை உறுதி செய்த பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது ‘‘ஒன்றிரண்டு வெளிநாட்டு டி20 லீக் அணிகள் யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டியுள்ளன. இதனால் யுவராஜ் சிங் வெளிநாட்டு வீரராக கலந்து கொள்வதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார்’’ என்றார்.
    Next Story
    ×