என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்
Byமாலை மலர்19 Jun 2019 9:08 AM GMT (Updated: 19 Jun 2019 9:08 AM GMT)
கடந்த வாரம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த யுவராஜ், வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளில் விளையாட அனுமதி கோரியுள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கியவர் யுவராஜ் சிங். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் எனவும் கூறியிருந்தார்.
பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து விலகியுள்ளதால், வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளில் விளையாட முடிவு செய்தார். இதுகுறித்து பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்பேன் என்று தெரிவித்தார். மேலும், ஐபில் தொடரில் விளையாட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார். இதை உறுதி செய்த பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது ‘‘ஒன்றிரண்டு வெளிநாட்டு டி20 லீக் அணிகள் யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டியுள்ளன. இதனால் யுவராஜ் சிங் வெளிநாட்டு வீரராக கலந்து கொள்வதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார்’’ என்றார்.
பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து விலகியுள்ளதால், வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக்குகளில் விளையாட முடிவு செய்தார். இதுகுறித்து பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்பேன் என்று தெரிவித்தார். மேலும், ஐபில் தொடரில் விளையாட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார். இதை உறுதி செய்த பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது ‘‘ஒன்றிரண்டு வெளிநாட்டு டி20 லீக் அணிகள் யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டியுள்ளன. இதனால் யுவராஜ் சிங் வெளிநாட்டு வீரராக கலந்து கொள்வதற்காக பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X