search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைனலுக்குள் நுழைந்துவிட்டால் சாம்பியன்தான்: இந்த முறையும் ரோகித் சர்மாவுக்கு ராசி கைகொடுக்குமா?
    X

    பைனலுக்குள் நுழைந்துவிட்டால் சாம்பியன்தான்: இந்த முறையும் ரோகித் சர்மாவுக்கு ராசி கைகொடுக்குமா?

    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மூன்று முறையும் கோப்பையை தட்டிச்சென்ற ரோகித் சர்மாவுக்கு, பழைய நிகழ்வு கைக்கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். #IPL2019 #RohitSharma
    ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் முதலிடம் பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ 2-வது இடம் பிடித்தது. இரண்டு அணிகளும் நேற்று சென்னையில் நடைபெற்ற குவாலிபையர்-1ல் பலப்ரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.



    மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா தலைமையில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2013, 2105, 2017-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த மூன்று முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது.



    மேலும், 2015, 2017 மற்றும் 2019 என மூன்று வருடமும் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதன்படி பார்த்தால் (2019) இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்லும் என பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வருகிறது. இந்த ராசி ரோகித் சர்மாவுக்கு கைகொடுக்குமா? என்று ரசிர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×