search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட் - 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்த 2வது வீரர் விராட் கோலி
    X

    ஐபிஎல் கிரிக்கெட் - 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்த 2வது வீரர் விராட் கோலி

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார். #IPL2019 #RCB #ViratKohli
    ஐபிஎல் 2019 சீசன் தொடங்குவதற்கு முன்பு 5 ஆயிரம் ரன்னை எடுக்கப்போகும் முதல் வீரர் யார் என்பதில் ரெய்னா, விராட் கோலி இடையே போட்டி இருந்தது. இருவருக்கும் முறையே 15 மற்றும் 52 ரன் தேவைப்பட்டது.
     
    சென்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தின் போது விராட் கோலிக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் 6 ரன்னில் ஆட்டம் இழந்து வாய்ப்பை தவறவிட்டார். 2-வது பேட்டிங்கின்போது ரெய்னா 15 ரன்னை எடுத்து ஐபிஎல்-லில் 5 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தார்.

    இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

    மும்பை இந்தியன்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனான விராட் கோலி 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கோலி 157 இன்னிங்சில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் 5 ஆயிரம் ரன்களை எடுக்கும் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 4555 ரன்களுடன் 3வது இடம்பிடித்துள்ளார். #IPL2019 #RCB #ViratKohli
    Next Story
    ×