search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது போட்டி நடைபெறும் ராஞ்சி மைதான கண்ணோட்டம்
    X

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது போட்டி நடைபெறும் ராஞ்சி மைதான கண்ணோட்டம்

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் ராஞ்சி மைதானத்தின் கண்ணோட்டம் ஒரு பார்வை. #INDvAUS
    ராஞ்சி மைதானத்தில் 2013-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு நடந்த போட்டியில் இந்திய அணி 19 ரன்னில் நியூசிலாந்திடம் தோற்றது.

    இந்திய அணி இங்கு 4 ஆட்டத்தில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோற்றது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்து இருந்தது. இங்கிலாந்து அணி 155 ரன்னில் சுருண்டதே குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

    விராட் கோலி 3 இன்னிங்சில் 261 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கோலி, இலங்கை வீரர் மேத்யூஸ் ஆகியோர் ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக தலா 139 ரன் குவித்துள்ளனர்.

    அஸ்வின் 3 ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் மெண்டிஸ் 73 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.
    Next Story
    ×