என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 113 ரன்னில் வெற்றி
Byமாலை மலர்7 March 2019 8:39 AM GMT (Updated: 7 March 2019 8:39 AM GMT)
செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை 113 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா #SAvSL
செஞ்சூரியன்:
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 45.1 ஓவரில் 251 ரன்கள் அடித்து ‘ஆல் அவுட்’ ஆனது. குயின்டன் டி காக் 70 பந்தில் 94 ரன்னும் (17 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் டு பிளிசிஸ் 57 ரன்னும் எடுத்தனர். பெரேரா 3 விக்கெட்டும், மலிங்கா, டி சில்வா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்னாண்டோ அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் வருகிற 10-ந்தேதி டர்பனில் நடக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 45.1 ஓவரில் 251 ரன்கள் அடித்து ‘ஆல் அவுட்’ ஆனது. குயின்டன் டி காக் 70 பந்தில் 94 ரன்னும் (17 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் டு பிளிசிஸ் 57 ரன்னும் எடுத்தனர். பெரேரா 3 விக்கெட்டும், மலிங்கா, டி சில்வா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்னாண்டோ அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் வருகிற 10-ந்தேதி டர்பனில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X