என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?: நாளை 3-வது போட்டி
Byமாலை மலர்7 March 2019 8:23 AM GMT (Updated: 7 March 2019 8:23 AM GMT)
ராஞ்சியில் நாளை நடைபெற இருக்கும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. #INDvAUS
ராஞ்சி:
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது நடைபெற்று வரும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை நடந்த இரண்டு ஆட்டத்திலும் இந்தியா வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன்னிலும் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை (8-ந்தேதி) நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் பேட்டிங்கிலும் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக வீரர் விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த போட்டியில் கடைசி ஓவரில் அவரது நேர்த்தியான பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது.
தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. இதனால் அந்த அணி வீரர்கள் அனைவரும் கடுமையாக போராடுவார்கள. ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 134-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 133 போட்டியில் இந்தியா 49-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது நடைபெற்று வரும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை நடந்த இரண்டு ஆட்டத்திலும் இந்தியா வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன்னிலும் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை (8-ந்தேதி) நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் பேட்டிங்கிலும் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக வீரர் விஜய் சங்கர் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த போட்டியில் கடைசி ஓவரில் அவரது நேர்த்தியான பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது.
தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. இதனால் அந்த அணி வீரர்கள் அனைவரும் கடுமையாக போராடுவார்கள. ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 134-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 133 போட்டியில் இந்தியா 49-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X