search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு?
    X

    டாப் ஆர்டர் வரிசையில் ரகானே, ரிஷப் பந்த்: உலகக்கோப்பைக்கான மாற்று ஏற்பாடு?

    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் ரகானே, ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர். #Rahane #RishabhPant
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரகானே சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரையும் டாப் ஆர்டர் வரிசையில் களமிறங்க இந்திய அணி நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    விரைவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிறது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிச்சயம் இடமிருக்கும். இதில் எந்த சந்தேகமும் இருக்காது. அதேவேளையில் கேஎல் ராகுல் மாற்று தொடக்க பேட்ஸ்மேன் நிலையில் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

    தற்போது இருவரும் பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடவில்லை.

    ஒருவேளை வீரர்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்பதால் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×