என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பேபி சிட்டர்’ தேவை: ரிஷப் பந்தை நகைச்சுவைக்காக கிண்டல் செய்த ரோகித் சர்மா
Byமாலை மலர்10 Jan 2019 10:38 AM GMT (Updated: 10 Jan 2019 10:38 AM GMT)
தற்போது தனக்கு ‘பேபி சிட்டர்’ தேவை என்று ரிஷப் பந்தை நகைச்சுவைக்காக கிண்டல் செய்துள்ளார் இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா #RohitSharma #RishabhPant
இளம் வீரரான ரிஷப் பந்த் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். மெல்போர்ன் டெஸ்டின்போது ரிஷப் பந்து பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ‘‘ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது ‘‘ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்) ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அணிக்கு பேட்ஸ்மேன் தேவை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கொஞ்ச நாள் நீட்டித்துக்கொள்.
பின்னர் புத்தாண்டையொட்டு ஆஸ்திரேலிய பிரதமர் இருஅணி வீரர்களுக்கும் விருந்து அளித்தார். அப்போது டிம் பெய்ன் தனது மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது ரிஷப் பந்த் டிம் பெய்னின் குழந்தைகளை எடுத்து கொஞ்சினார். இந்த போட்டோவை வெளியிட்ட டிம் பெய்னின் மனைவி, ‘‘ரிஷப் பந்த் சிறந்த பேபி சிட்டர்’’ என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைகேப்டனும், அதிரடி வீரரும் ஆன ரோகித் சர்மாவிற்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது குழந்தைக்கு ‘சமைரா’ என்று பெயரிட்டுள்ளனர்.
தற்போது ரோகித் சர்மா ஒருநாள் தொடர் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் நகைச்சுவைக்காக ரிஷப் பந்தை டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் சிறந்த பேபி சிட்டர் என்று கேள்விப்பட்டேன். இப்போது தனக்கு பேபி சிட்டர் தேவை. ரித்திகா மிகவும் சந்தோசம் அடைவார்’’ என்று பதிவிட்டார்.
இதற்கு ரிஷப் பந்த் ‘‘சாஹல் அவரது வேலையை சரியாக பார்க்கவில்லையா? ரோகித் சர்மாவின் மகளுக்கு பேபி சிட்டராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி’’ என்று பதிவிட்டுள்ளார்.
ஹோபர்ட் அழகான நகரம். தங்குவதற்கு ஒரு சொகுசு குடியிருப்பை அவருக்கு வழங்கிவிடலாம்.... அப்புறம்... நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்து செல்லும்போது, நீதான் என் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். சரியா...’’ என்று கூறி கேலி செய்தார்.Morning buddy. Heard your a good baby sitter, need one right now. Ritika will be quite happy 😃 @RishabPant777https://t.co/JkGWTYpnBk
— Rohit Sharma (@ImRo45) January 9, 2019
பின்னர் புத்தாண்டையொட்டு ஆஸ்திரேலிய பிரதமர் இருஅணி வீரர்களுக்கும் விருந்து அளித்தார். அப்போது டிம் பெய்ன் தனது மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது ரிஷப் பந்த் டிம் பெய்னின் குழந்தைகளை எடுத்து கொஞ்சினார். இந்த போட்டோவை வெளியிட்ட டிம் பெய்னின் மனைவி, ‘‘ரிஷப் பந்த் சிறந்த பேபி சிட்டர்’’ என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைகேப்டனும், அதிரடி வீரரும் ஆன ரோகித் சர்மாவிற்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது குழந்தைக்கு ‘சமைரா’ என்று பெயரிட்டுள்ளனர்.
தற்போது ரோகித் சர்மா ஒருநாள் தொடர் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் நகைச்சுவைக்காக ரிஷப் பந்தை டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் சிறந்த பேபி சிட்டர் என்று கேள்விப்பட்டேன். இப்போது தனக்கு பேபி சிட்டர் தேவை. ரித்திகா மிகவும் சந்தோசம் அடைவார்’’ என்று பதிவிட்டார்.
இதற்கு ரிஷப் பந்த் ‘‘சாஹல் அவரது வேலையை சரியாக பார்க்கவில்லையா? ரோகித் சர்மாவின் மகளுக்கு பேபி சிட்டராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி’’ என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X