search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 ஹாங்காங் வீரர்கள் சஸ்பெண்டு- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை
    X

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 ஹாங்காங் வீரர்கள் சஸ்பெண்டு- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தொடர்பாக 3 ஹாங்காங் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது. #ICC #MatchFixing
    துபாய்:

    ஹாங்காங் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த 3 வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது.

    2015-ம் ஆண்டு உலக கோப்பை தகுதி சுற்றில் கனடா, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.



    இர்பான், நதீம் ஆகியோர் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதில் நதீம் அகமது சமீபத்தில் நடந்த ஆகிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியவர் ஆவார்.

    பாகிஸ்தானை சேர்ந்த இந்த 3 வீரர்களும் 2 வார காலத்துக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். #ICC #MatchFixing
    Next Story
    ×