search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகல், இரவு டெஸ்டை நடத்த வேண்டும்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
    X

    பகல், இரவு டெஸ்டை நடத்த வேண்டும்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

    ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தி உள்ளார். #SanjayManjrekar #TestCricket
    புதுடெல்லி:

    பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு அடிலெய்டுவில் நடந்த இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதின.

    இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ, இதற்கு ஆதரவாக இல்லை. இதுவரை இந்தியாவில் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டி கூட நடைபெறவில்லை.



    இந்த நிலையில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறும்போது, பகல்-இரவு டெஸ்டில் நாம் ஏன்? இன்னும் விளையாடாமல் இருக்கிறோம். அதிகமான ரசிகர்களை கவர பகல்-இரவு டெஸ்ட் அவசியமானது” என்றார். #SanjayManjrekar #TestCricket
    Next Story
    ×