என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி
Byமாலை மலர்27 Aug 2018 7:08 AM GMT (Updated: 27 Aug 2018 7:08 AM GMT)
ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதையடுத்து இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. #asiangames2018
ஜகார்தா:
18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேற்று ஒரேநாளில் 7 பதக்கத்தை பெற்றது. தடகளத்தில் 3 வெள்ளியும், குதிரையேற்றத்தில் 2 வெள்ளியும் கிடைத்தது.
‘பிரிட்ஜ்’ ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றது.
8-வது நாள் முடிவில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 36 பதக்கம் பெற்றுள்ளது.
மேலும் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியாகி உள்ளது.
இறுதிப்போட்டியில் இந்திய அணிகள் கொரியாவை சந்திக்கிறது. நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. பெண்கள் போட்டி காலை 11.15 மணிக்கும், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டி மதியம் 12.05 மணிக்கும் தொடங்குகிறது.
பெண்கள் வில்வித்தை அணி கால்இறுதியில் 229-224 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், அரை இறுதியில் 225- 222 என்ற கணக்கில் சீனதைபேயையும் தோற்கடித்தது.
ஆண்கள் வில்வித்தை அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 227-213 என்ற கணக்கில் கத்தாரையும், கால்இறுதியில் 227-226 என்ற கணக்கில் பிலிப்பைன்சையும், அரை இறுதியில் 231-227 என்ற கணக்கில் சீனதைபேயும் வீழ்த்தியது. #asiangames2018
18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேற்று ஒரேநாளில் 7 பதக்கத்தை பெற்றது. தடகளத்தில் 3 வெள்ளியும், குதிரையேற்றத்தில் 2 வெள்ளியும் கிடைத்தது.
‘பிரிட்ஜ்’ ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றது.
8-வது நாள் முடிவில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 36 பதக்கம் பெற்றுள்ளது.
மேலும் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியாகி உள்ளது.
வில்வித்தை பந்தயத்தில் காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் 2 வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இறுதிப்போட்டியில் இந்திய அணிகள் கொரியாவை சந்திக்கிறது. நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. பெண்கள் போட்டி காலை 11.15 மணிக்கும், ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டி மதியம் 12.05 மணிக்கும் தொடங்குகிறது.
பெண்கள் வில்வித்தை அணி கால்இறுதியில் 229-224 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், அரை இறுதியில் 225- 222 என்ற கணக்கில் சீனதைபேயையும் தோற்கடித்தது.
ஆண்கள் வில்வித்தை அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 227-213 என்ற கணக்கில் கத்தாரையும், கால்இறுதியில் 227-226 என்ற கணக்கில் பிலிப்பைன்சையும், அரை இறுதியில் 231-227 என்ற கணக்கில் சீனதைபேயும் வீழ்த்தியது. #asiangames2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X