search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோற்றதும் மைதானத்தில் இருந்து அப்படியே சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுக்கல்
    X

    தோற்றதும் மைதானத்தில் இருந்து அப்படியே சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுக்கல்

    உருகுவே அணியிடம் 1-2 என தோல்வியடைந்ததும், மைதானத்தில் இருந்து நேரடியாக சோச்சி விமான நிலையம் சென்று சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுச்கல் அணி. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரணடு நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்றன. 2-வது நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி உருகுவேவை எதிர்கொண்டது.



    மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே 2-1 என போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத போர்ச்சுக்கல் அணியால் தோல்விக்குப்பின் ஓட்டல் திரும்ப விரும்பவில்லை. நேரடியாக மைதானத்தில் இருந்த சோச்சி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து போர்ச்சுக்கல் புறப்பட்டுச் சென்றது.
    Next Story
    ×