search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்தியா ஏ அணி வாய்ப்பை இழந்தார் சஞ்சு சாம்சன்
    X

    யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்தியா ஏ அணி வாய்ப்பை இழந்தார் சஞ்சு சாம்சன்

    யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ‘ஏ’ அணியில் விளையாடும் வாய்ப்பை சஞ்சு சாம்சன் இழந்துள்ளார். #IndiaA
    ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்தியாவுடன் இங்கிலாந்து லயன், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் இடம்பிடித்திருந்தார். நேற்று இந்திய ‘ஏ’ அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. அப்போது சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறவில்லை.



    இதுகுறித்து விசாரித்தபோது, தற்போது இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இந்த டெஸ்டில் மிகவும் குறைவான ஸ்கோர் பெற்றதால் சஞ்சு சாம்சன் இந்தியா ‘ஏ’ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், இந்திய ‘ஏ’ அணியில் தேர்வு பெற்றும், யோ-யோ டெஸ்டில் நீக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×