search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடர் முழுவதும் வீரர்கள், ஆலோசகர்கள் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்
    X

    ஐபிஎல் தொடர் முழுவதும் வீரர்கள், ஆலோசகர்கள் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்

    வெளிநாட்டு வீரர்கள் தொடர் முழுவதும் கட்டாயம் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 4-வது இடம்பிடித்ததால் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

    லீக் போட்டியின்போது கடைசி போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தேசிய அணியில் விளையாடுவதற்காக சென்று விட்டனர். இதனால் கொல்கத்தா அணிக்கெதிரான எலிமினேட்டரில் இருவரும் கலந்து கொள்ளவில்லை.



    இந்த போட்டியில் இருவருக்கும் பதில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் அணியிடம் இடம்பிடித்தனர். இவர்களால் பெரிய அளிவில் சாதிக்க முடியவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

    அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்கும்போது வீரர்கள் மற்றும் ஆலோசகர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா? என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களை ஏலத்தில் எடுக்கக்ககூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×