என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2018- சென்னை அணி தோல்வி- பந்து வீச்சாளர்கள் மீது டோனி அதிருப்தி
Byமாலை மலர்12 May 2018 8:34 AM GMT (Updated: 12 May 2018 8:34 AM GMT)
ராஜஸ்தானிடம் தோல்வியடைந்ததற்கு, பந்து வீச்சாளர்கள் மீது சென்னை அணி கேப்டன் டோனி அதிருப்தி அடைந்துள்ளார். #IPL2018 #MSDhoni
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணிக்கு பதிலடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் 5-வது வெற்றியை பெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. ரெய்னா 35 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி 1 சிக்சர்), வாட்சன் 31 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) டோனி 23 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பட்லர் 60 பந்தில் 95 ரன் எடுத்து (11 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை நின்று வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
சென்னை சூப்பர் சிங்ஸ் அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தொடர்பாக பந்து வீச்சாளர்கள் மீது கேப்டன் டோனி அதிருப்தி அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
176 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். பந்து வீச்சாளர்கள் தோல்வி ஏற்பட்டது. நேர்த்தியாக பந்து வீசுவது பற்றி பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. மோசமான பந்து வீச்சால் ஏராளமான பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தோம். இனிவரும் ஆட்டங்களில் பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். தற்போது விளையாடும் அணியே சிறந்த லெவனாக இருக்கிறது. பீல்டிங் நன்றாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும் அந்த அணி ஏற்கனவே சென்னையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-
பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி பெற்றுள்ளோம். பாராட்டு எல்லாம் அவரைதான் சாரும். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. கிருஷ்ணப்பா கவுதமின் 2 சிக்சர்கள் முக்கியமானது. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். இனிவரும் 3 ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அணி 12-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை நாளை (13-ந்தேதி) சந்திக்கிறது. புனேயில் இந்த ஆட்டம் நடக்கிறது. இதேபோல் ராஜஸ்தான் அணி மும்பை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பட்லர் 60 பந்தில் 95 ரன் எடுத்து (11 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை நின்று வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
சென்னை சூப்பர் சிங்ஸ் அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தொடர்பாக பந்து வீச்சாளர்கள் மீது கேப்டன் டோனி அதிருப்தி அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
176 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். பந்து வீச்சாளர்கள் தோல்வி ஏற்பட்டது. நேர்த்தியாக பந்து வீசுவது பற்றி பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. மோசமான பந்து வீச்சால் ஏராளமான பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தோம். இனிவரும் ஆட்டங்களில் பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். தற்போது விளையாடும் அணியே சிறந்த லெவனாக இருக்கிறது. பீல்டிங் நன்றாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும் அந்த அணி ஏற்கனவே சென்னையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-
பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி பெற்றுள்ளோம். பாராட்டு எல்லாம் அவரைதான் சாரும். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. கிருஷ்ணப்பா கவுதமின் 2 சிக்சர்கள் முக்கியமானது. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். இனிவரும் 3 ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அணி 12-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை நாளை (13-ந்தேதி) சந்திக்கிறது. புனேயில் இந்த ஆட்டம் நடக்கிறது. இதேபோல் ராஜஸ்தான் அணி மும்பை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X