என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - இந்திய அணி 8-ந் தேதி அறிவிப்பு
Byமாலை மலர்4 May 2018 11:37 PM GMT (Updated: 4 May 2018 11:37 PM GMT)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வருகிற 8-ந் தேதி தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது. #BCCI #TeamIndia
புதுடெல்லி:
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 8-ந் தேதி தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது.
மேலும் ஜூன் 27-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் 2 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. மற்றும் இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி ஜூன் 21-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணிகள் ஒரேநேரத்தில் தேர்வு செய்யப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராகும் வகையில் கேப்டன் விராட் கோலி கவுண்டி கிளப் அணியான சுர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் கவுண்டி போட்டியில் விளையாட உள்ளார். இதனால் இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. #BCCI #TeamIndia
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் டெஸ்ட் போட்டியாகும். இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 8-ந் தேதி தேர்வு செய்து அறிவிக்கப்படுகிறது.
மேலும் ஜூன் 27-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் 2 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. மற்றும் இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி ஜூன் 21-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணிகள் ஒரேநேரத்தில் தேர்வு செய்யப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராகும் வகையில் கேப்டன் விராட் கோலி கவுண்டி கிளப் அணியான சுர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் கவுண்டி போட்டியில் விளையாட உள்ளார். இதனால் இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. #BCCI #TeamIndia
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X