search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வி - என்ன சொன்னார் தமிழ் கவிஞர் ஹர்பஜன்?
    X

    மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வி - என்ன சொன்னார் தமிழ் கவிஞர் ஹர்பஜன்?

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் டெண்டுல்கர், அப்பவப்போது தமிழில் ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். #CSK #IPL2018 #HarbhajanSingh

    சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் பதிவிட்டுள்ளதாவது, “தோல்வி என்னும் அடி சறுக்கியது ஆனால் நாம் யானை போல் எழுவதற்கு நேரம் பிடிக்க போவதில்லை குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம் . தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும்” என அவர் கூறியுள்ளார்.


    கடந்த எல்லா ஐபிஎல் சீசனிலும் ஹர்பஜன் மும்பை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. #CSK #IPL2018 #HarbhajanSingh
    Next Story
    ×