என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்தை சேதப்படுத்திய விவகாரம் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமேன் பதவி விலகுகிறார்
Byமாலை மலர்27 March 2018 5:28 AM GMT (Updated: 27 March 2018 5:28 AM GMT)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்கள் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் அந்த அணியின் பயிற்சியாளர் டேரான் லீமேன் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #SAvAUS #DarrenLehmann #BallTempering
சிட்னி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்கள் பந்து படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் டேரான் லீமேன் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வீரர்கள் அறையில் இருநாட்டு வீரர்கள் மோதல், களத்தில் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் ஆஸ்திரேலியா சிக்கி இருந்தது.
அதோடு புதிதாக பந்தை சேதப்படுத்திய பிரச்சனையில் சிக்கியது அவமானத்தை ஏற்படுத்தியது. கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது.
பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். இதனால் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவியும், வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுமித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. அதோடு 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமேனும் பதவி விலகுகிறார். இதை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்து உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு லீமேன் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்று அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து லீமேன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் விசாரணைக்கு முன்பே பதவி விலகுவது சரியாக இருக்கும் என்று லீமேன் கருதுகிறார்.
மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிளார்க், “பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் லீமேனுக்கும் சமமான பங்களிப்பு இருக்கும். அவருக்கு இந்த மோசடி தெரிந்து தான் நடத்து இருக்கும்” என்று கூறி இருந்தார்.
இதன் காரணமாக அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது. 2019 ஆசஷ் டெஸ்ட் தொடர் வரை லீமேனின் பதவி காலம் இருக்கிறது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் முன்னதாகவே அவர் பொறுப்பை விட்டு செல்ல இருக்கிறார். #SAvAUS #DarrenLehmann #BallTempering
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்கள் பந்து படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் டேரான் லீமேன் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வீரர்கள் அறையில் இருநாட்டு வீரர்கள் மோதல், களத்தில் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் ஆஸ்திரேலியா சிக்கி இருந்தது.
அதோடு புதிதாக பந்தை சேதப்படுத்திய பிரச்சனையில் சிக்கியது அவமானத்தை ஏற்படுத்தியது. கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது.
பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். இதனால் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவியும், வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுமித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. அதோடு 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமேனும் பதவி விலகுகிறார். இதை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்து உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு லீமேன் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்று அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து லீமேன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் விசாரணைக்கு முன்பே பதவி விலகுவது சரியாக இருக்கும் என்று லீமேன் கருதுகிறார்.
மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிளார்க், “பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் லீமேனுக்கும் சமமான பங்களிப்பு இருக்கும். அவருக்கு இந்த மோசடி தெரிந்து தான் நடத்து இருக்கும்” என்று கூறி இருந்தார்.
இதன் காரணமாக அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது. 2019 ஆசஷ் டெஸ்ட் தொடர் வரை லீமேனின் பதவி காலம் இருக்கிறது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் முன்னதாகவே அவர் பொறுப்பை விட்டு செல்ல இருக்கிறார். #SAvAUS #DarrenLehmann #BallTempering
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X