search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் காரைக்குடி காளை திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் காரைக்குடி காளை திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் ரூபி திருச்சி வாரியர்சுடன் மோதுகின்றன.
    நத்தம்:

    தமிழ்நாடு பிரிமீயர் ’லீக்’ 20 ஓவர் கிரிக்கெட்போட்டி சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் நடந்து வருகிறது.

    இன்று இரவு நத்தத்தில் நடக்கும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் காரைக்குடி காளை - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பத்ரிநாத் தலைமையிலான காரைக்குடி காளை 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    இன்று தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

    மேலும் ரன்-ரேட் (-0.04) மோசமாக இருப்பதால் மிகப்பெரிய வெற்றி பெற்றால் சாதகமாக இருக்கும். ஆனால் வெற்றிக்காக கடுமையாக போராடும். பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 4 தோல்வி பெற்று இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சி உள்ளன. இந்த இரண்டில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு வாய்ப்புள்ள மற்ற அணிகள் முடிவு பொருத்து இருக்கும். இருந்தபோதிலும் திருச்சிக்கு வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது.
    Next Story
    ×