search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அணியின் பயிற்சியாளர் புலம்பல்
    X

    மதுரை அணியின் பயிற்சியாளர் புலம்பல்

    நன்றாக விளையாடிய போதிலும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்னும் ஒரு வெற்றியை கூட வசப்படுத்த முடியாதது வருத்தமாக உள்ளது என மதுரை அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நெல்லையில் நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட்டை வீழ்த்தியது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் மதுரை அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை திருவள்ளூர் அணி 13.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. திருவள்ளூர் கேப்டன் பாபா அபராஜித் 72 ரன்கள் (6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். முதல் வெற்றிக்காக மதுரை அணி போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், ‘கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றியை நெருங்கி வந்து தோல்வி அடைந்திருக்கிறோம். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டனர். ஆனால் பாபா அபராஜித் அற்புதமாக விளையாடி வெற்றி வாய்ப்பை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்து விட்டார்.

    நன்றாக விளையாடிய போதிலும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்னும் ஒரு வெற்றியை கூட வசப்படுத்த முடியாதது வருத்தமாக உள்ளது. இந்த சீசனில் குறைந்தது ஒரு வெற்றியாவது பெறுவோம் என்று நம்புகிறேன்’ என்றார். 
    Next Story
    ×