என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி
Byமாலை மலர்22 Jun 2017 11:58 PM GMT (Updated: 22 Jun 2017 11:58 PM GMT)
உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
லண்டன்:
உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 14-ம் நிலை அணியான மலேசியாவுடன் மோதியது. இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினர். 19-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ராஸி ரஹிமும், 20-வது நிமிடத்தில் இன்னொரு மலேசிய வீரர் டெங்கு தாஜூதினும் கோல் அடித்தனர். இதன் பின்னர் இந்திய வீரர் ரமன்தீப்சிங் அடுத்தடுத்து (24 மற்றும் 26-வது நிமிடம்) கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து வெற்றிக்கனியை பறிப்பது யார்? என்று பரபரப்பான சூழலில், 48-வது நிமிடத்தில் மலேசியாவின் ராஸி ரஹிம் மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கும் மலேசியா தகுதி பெற்றது.
சில மந்தமான தடுப்பாட்டம் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்திய அணி விட்டுக்கொடுத்த 7 பெனால்டி கார்னர் வாய்ப்பில் 3-ஐ மலேசியா கோலாக மாற்றியது. மலேசிய அணி அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுடன் நாளை மோதுகிறது. முன்னதாக அர்ஜென்டினா அணி தனது கால்இறுதியில் 3-1 கோல் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது.
உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 14-ம் நிலை அணியான மலேசியாவுடன் மோதியது. இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினர். 19-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ராஸி ரஹிமும், 20-வது நிமிடத்தில் இன்னொரு மலேசிய வீரர் டெங்கு தாஜூதினும் கோல் அடித்தனர். இதன் பின்னர் இந்திய வீரர் ரமன்தீப்சிங் அடுத்தடுத்து (24 மற்றும் 26-வது நிமிடம்) கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து வெற்றிக்கனியை பறிப்பது யார்? என்று பரபரப்பான சூழலில், 48-வது நிமிடத்தில் மலேசியாவின் ராஸி ரஹிம் மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கும் மலேசியா தகுதி பெற்றது.
சில மந்தமான தடுப்பாட்டம் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்திய அணி விட்டுக்கொடுத்த 7 பெனால்டி கார்னர் வாய்ப்பில் 3-ஐ மலேசியா கோலாக மாற்றியது. மலேசிய அணி அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுடன் நாளை மோதுகிறது. முன்னதாக அர்ஜென்டினா அணி தனது கால்இறுதியில் 3-1 கோல் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X