search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி
    X

    உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி

    உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
    லண்டன்:

    உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 14-ம் நிலை அணியான மலேசியாவுடன் மோதியது. இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினர். 19-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ராஸி ரஹிமும், 20-வது நிமிடத்தில் இன்னொரு மலேசிய வீரர் டெங்கு தாஜூதினும் கோல் அடித்தனர். இதன் பின்னர் இந்திய வீரர் ரமன்தீப்சிங் அடுத்தடுத்து (24 மற்றும் 26-வது நிமிடம்) கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து வெற்றிக்கனியை பறிப்பது யார்? என்று பரபரப்பான சூழலில், 48-வது நிமிடத்தில் மலேசியாவின் ராஸி ரஹிம் மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கும் மலேசியா தகுதி பெற்றது.

    சில மந்தமான தடுப்பாட்டம் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்திய அணி விட்டுக்கொடுத்த 7 பெனால்டி கார்னர் வாய்ப்பில் 3-ஐ மலேசியா கோலாக மாற்றியது. மலேசிய அணி அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுடன் நாளை மோதுகிறது. முன்னதாக அர்ஜென்டினா அணி தனது கால்இறுதியில் 3-1 கோல் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது. 
    Next Story
    ×