search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.சி.சி.ஐ. தலைவராக வினோத் ராய் நியமனம்: முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும் இடம்பிடிப்பு
    X

    பி.சி.சி.ஐ. தலைவராக வினோத் ராய் நியமனம்: முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும் இடம்பிடிப்பு

    பி.சி.சி.ஐ.யின் நிர்வாகக்குழு தலைவர்களாக முன்னாள் சிஏஜி வினோத் ராய், ராமச்சந்திர குகா மற்றும் விக்ரம் லிமாயா ஆகியோரை உச்சநீதிமன்றம் இன்று நியமித்துள்ளது.
    பி.சி.சி.ஐ.யின் தலைவராக இருந்த அனுராக் தாகூர், செயலாளராக இருந்து அஜய் ஷிர்கே ஆகியோரை உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியது. இதனால் அப்பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

    இந்நிலையில் பிசிசிஐ-யை நிர்வகிக்க நான்குபேர் கொண்ட நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. முன்னாள் சிஏஜி வினோத் ராய், கிரிக்கெட் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்த்ரா குகா, விக்ரம் லிமாயே மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் தலைவராக வினோத் ராய் செயல்படுவார்.
    Next Story
    ×