search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான முடிவு: டிராவிட்
    X

    கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான முடிவு: டிராவிட்

    கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான நேரத்தில் எடுத்த முடிவு என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகியிருப்பது சரியான நேரத்தில் எடுத்த முடிவாகும். அடுத்த 50 ஓவர் (2019) உலக கோப்பை போட்டியில் அவர் தன்னால் விளையாட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். எனவேதான் கேப்டன் பதவியில் இருந்து விலகல் முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

    அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமே இல்லை. நெருக்கடியான நேரத்தில் அவர் செயல்பட்டது எளிதான காரியமல்ல.

    விராட் கோலி ஒருநாள் போட்டி அணிக்கு தலைமை ஏற்க இதுதான் சரியான நேரம்.
    Next Story
    ×