என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன்
Byமாலை மலர்4 Jan 2017 3:07 PM GMT (Updated: 4 Jan 2017 3:07 PM GMT)
தெற்காசிய மகளிர் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வங்காளசேதத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. திங்கட்கிழமை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டியை உறுதி செய்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, மாலத்தீவு அணியை 6-0 என வீழ்த்தியது.
இந்நிலையில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி வங்காளதேச அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய மகளிர் அணி தொடர்ந்து நான்காவது முறையாக வென்றுள்ளது.
இந்த வெற்றியானது அணியின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்தது என்றும், அனைத்து வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடியதாகவும் பயிற்சியாளர் சஜித் தார் தெரிவித்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி வங்காளதேச அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய மகளிர் அணி தொடர்ந்து நான்காவது முறையாக வென்றுள்ளது.
இந்த வெற்றியானது அணியின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்தது என்றும், அனைத்து வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடியதாகவும் பயிற்சியாளர் சஜித் தார் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X