என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: கோலாகலமாக நடந்த மகா கும்பமேளா-66 கோடி பேர் புனித நீராடல்
    X

    2025 REWIND: கோலாகலமாக நடந்த மகா கும்பமேளா-66 கோடி பேர் புனித நீராடல்

    • மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
    • அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.

    வாடா ரமேஷ் எப்படிடா இருக்கே?

    நான் நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்கே?

    நான் இந்த வாரம் வெளிநாட்டுக்கு போகப் போறேண்டா. நீ எங்கேயும் போகலையாடா ரமேஷ்.

    இல்லைடா சுரேஷ். நான் இந்தியாவை விட்டு தாண்டலைடா.

    ஆமா, நீ தான் ஒரு செய்தி சேனல் ஆச்சே. எங்க இந்த ஆண்டு நடந்த முக்கியான செய்திகளை சுருக்கமா சொல்லு கேட்போம்.

    எனக்கு தெரிந்ததைச் சொல்றேன். கேட்டுக்கோ.

    முதல்ல ஜனவரியில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பத்தி சொல்றேன்.

    மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட விழாதான் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா.


    கும்பமேளாவில் சில வகைகள் உள்ளன. ஆர்த் கும்பமேளா 6 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். பூர்ண கும்பமேளா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மகா கும்பமேளா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதுதான் மகா கும்பமேளா.

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கியது.

    45 நாட்கள் கோலாகலமாக நடந்த மகா கும்பமேளா பிர்ப்ரவரி 26-ம் தேதியுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

    உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

    பிரயாக்ராஜ் மாவட்டம் சார்பில் ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஜனவரி 29-ம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.

    கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.


    கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.

    இனி அடுத்த மகா கும்பமேளா 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என கூறினான் சுரேஷ்.

    பரவால்லடா, இவ்வளவு தகவல் சொல்லுவேன்னு நான் நினைக்கலடா. உண்மையிலேயே நீ ஒரு மினி செய்தி சேனல் தாண்டா.

    என் மூஞ்சிக்கு நேரா என்னைப் புகழாதடா, எனக்கு பிடிக்காது ஓகேவா என பேச்சை நிறைவு செய்தான்.

    Next Story
    ×