search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வருகிற 26-ந்தேதி திருப்பதியில் ரூ.10.50 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
    X

    வருகிற 26-ந்தேதி திருப்பதியில் ரூ.10.50 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

    • கொரோனா தொற்றுக்குப்பிறகு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தன.
    • தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கு 10.50 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம்தோறும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப்பிறகு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தன.

    மேலும் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் தினமும் 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து கொண்டு செல்கின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்ய முடிவதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

    இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கு 10.50 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    இதேபோல் மறுநாள் 27-ந்தேதி ஆன்லைன் மூலம் விடுதி அறைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 78,299 பேர் தரிசனம் செய்தனர். 34,625 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.93 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    Next Story
    ×