என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் 17 வயது சிறுமி கற்பழிப்பு- கடற்படை வீரர் கைது
- வீட்டில் தனியாக இருக்கும் போது சிறுமிக்கு ஹன்ஸ்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அவர் கர்ப்பம் ஆனார்.
- சிறுமியின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அவரிடம் பெற்றோர் விசாரித்த போதுதான், ஹன்ஸ்ராஜ் அவரை கற்பழித்ததும், இதனால் சிறுமி கர்ப்பிணி ஆனதும் தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், பெக்ரோரை சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ் (வயது 26). கடற்படை வீரர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக கொச்சி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கி இருக்கிறார்.
இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றார். அப்போது ஹன்ஸ்ராஜூக்கு அருகில் வசித்து வந்த 17 வயது சிறுமி வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்தார்.
வீட்டில் தனியாக இருக்கும் போது அந்த சிறுமிக்கு ஹன்ஸ்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அவர் கர்ப்பம் ஆனார்.
சிறுமியின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அவரிடம் பெற்றோர் விசாரித்த போதுதான், ஹன்ஸ்ராஜ் அவரை கற்பழித்ததும், இதனால் சிறுமி கர்ப்பிணி ஆனதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கடற்படை வீரர் ஹன்ஸ்ராஜ் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்