search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - வெளியுறவுத்துறை மந்திரி
    X

    வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

    உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - வெளியுறவுத்துறை மந்திரி

    • ரஷிய தாக்குதல் 4 மாதத்தை தாண்டிய நிலையில் சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.
    • உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது என வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.

    உக்ரைன் விவகாரத்தில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் சிக்கலான விவகாரம். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தீங்கை அதிகரிக்கும் வகையிலான பகைமையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தான்.

    பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதிக்கு திரும்பி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை ஊக்குவிக்க வேண்டும். இதுதான் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியா அதன் சொந்த நலனில் முக்கியத்துவம் கொண்டுள்ளது.

    உக்ரைன் போரில் இருந்து எரிபொருள், உணவு, உர தட்டுப்பாடு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×