search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பழங்குடியின பெண் மீது தாக்குதல்-  பாஜக மீது பிரியங்கா காந்தி புகார்
    X

    பிரியங்கா காந்தி 

    பழங்குடியின பெண் மீது தாக்குதல்- பாஜக மீது பிரியங்கா காந்தி புகார்

    • மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின பெண் தீ வைத்து எரிப்பு.
    • உத்தரப் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தலித் இளைஞர் உயிரிழப்பு.

    மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் சொத்துத் தகராறில் பழங்குடியினப் பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தின் மால் பகுதியில் தலித் இளைஞர் ஒருவர், கட்டிலின் கீழ் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில், பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்று குற்றம் சாட்டினார்

    தலித், ஆதிவாசிகளின் பெயர்களை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தும் பாஜக, அவர்கள் மீதான கொடூரமான தாக்குதல் சம்பவங்கள் குறித்து மவுனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Next Story
    ×