என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் மருந்துகளை தயாரிக்க வேண்டும்- மத்திய சுகாதார மந்திரி வலியுறுத்தல்
- மருந்து உற்பத்தி நிறுவனங்கள் புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வெள்ளிவிழா கொண்டாட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒரு மருந்து கட்டுப்பாட்டாளராக மட்டுமின்றி, மருந்துகள் எளிதில் கிடைக்கும் வகையில் பணியாற்றுவது பாராட்டத்தக்கது.
வணிக நோக்கத்துக்காக மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், மருந்துகளை தயாரிக்க வேண்டும், புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.
மருந்து உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, ஊக்கத்தொகை திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய மருந்து நிறுவனங்கள் சிறப்பாக பங்காற்றின. மக்களுக்கு தரமான சுகாதார சேவையை அளிப்பதில், தொழில்துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்