search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமலாக்கத்துறை பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தாதது ஏன்?-  ராகுல் காந்தி கேள்வி
    X

    ராகுல்காந்தி 

    அமலாக்கத்துறை பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தாதது ஏன்?- ராகுல் காந்தி கேள்வி

    • பாஜக, மார்க்சிஸ்ட் இடையே ரகசிய புரிந்துணர்வு உள்ளது.
    • அவர்கள் செய்யும் வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    மலப்புரம்:

    கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாட்டில் தமது மக்களவைத் தொகுதி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ததுடன், அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மலப்புரம் பகுதியில் இன்று கேரள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது:

    என்னிடம் (மத்திய அமலாக்கத்துறை) 5 நாட்கள் விசாரித்தபோது, ​​ஏன் 5 நாட்கள் விசாரணை செய்தார்கள், 10 நாட்கள் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். அவர்கள் அதை மீண்டும் செய்வார்கள் என்று நம்புகிறேன். கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தாது, ஏனெனில் பாஜக மற்றும் சிபிஎம் (மார்க்சிஸ்ட்) இடையே புரிந்துணர்வு உள்ளது.

    நமது அரசியல் சாசனத்தை பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றுகிறது. மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் பயப்படவில்லை, நாட்டின் கட்டமைப்பை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அவர்கள் செய்யும் வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    சிபிஎம் எனது அலுவலகத்தை அழிப்பது உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறது. சிபிஎம் என் அலுவலகத்தை எத்தனை முறை சேதப்படுத்தினாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பா.ஜ.க மற்றும் சிபிஎம் வன்முறை மூலம் மக்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அந்த கட்சிகளுக்கு தைரியம் இல்லை,

    என்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் உட்கார வைப்பதன் மூலம் மத்திய அரசும், எனது அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதன் மூலம் சிபிஎம்-மும் எனது நடவடிக்கையை மாற்றி விடலாம் என நம்புகின்றன. எனது நடத்தையை எதிரிகளால் வடிவமைக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×