என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகாவில் அரசு துறை அவுட்சோர்சிங் பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு
Byமாலை மலர்21 May 2022 5:04 PM GMT (Updated: 21 May 2022 5:04 PM GMT)
தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இந்த வழிகாட்டுதல் பொருந்தும் என்று கர்நாடகா அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அதன் அனைத்து துறைகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அவுட்சோர்சிங் ஊழியர்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், ஹவுஸ் கீப்பிங், டிரைவர்கள் மற்றும் குரூப் டி பணியாளர்களுக்கு அவுட்சோர்சிங் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது மாநில அரசின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் அதிகாரம் சமூக நீதி மற்றும் சமமான வேலை வாய்ப்புகளுக்காக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத வேலைகளை அரசுஒதுக்கியுள்ளது.
அவுட்சோர்சிங் ஊழியர்களாக பெண்கள் தங்கள் கடமைகளை திறம்பட செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த சேவைகளுக்கு 33 சதவீத வேலைகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்கள் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற விதியை இடம் பெறச் செய்ய வேண்டும்.
அரசின் ஒரு பகுதியாக இருக்கும் தன்னாட்சிஅமைப்புகள், பல்கலைக் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இந்த வழிகாட்டுதல் பொருந்தும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து அரசுத்துறை செயலாளர்களும் இந்த உத்தரவை தங்கள் துறையின் கீழ் உள்ள அனைத்து அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர்
பி ரவிக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்...ஜம்மு காஷ்மீர் சுரங்கப்பாதை நிலச்சரிவில் சிக்கிய 10 தொழிலாளர்களும் பலி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X