search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கப்பல் சேவையை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங்
    X
    கப்பல் சேவையை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங்

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

    ஒரே நேரத்தில் 2 போர்க்கப்பல்கள் சேவை தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரத், உதய்கிரி போர்கப்பல்கள் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் விழா மும்பை மஜ்காவ் டாக்கில் நடந்தது.

    இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 2 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல்கள் மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். 

    சூரத் 15-பி டெஸ்டிராயர் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 4-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு மேற்கு இந்தியாவில் மும்பைக்கு பிறகு பெரிய வணிக மையமாக உள்ள குஜராத் மாநிலத்தின் தலைநகரான சூரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    உதய்கிரி 17-ஏ பிரிகேட்ஸ் திட்டத்தின் கீழ் தயாரான 3-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு ஆந்திராவின் மலைச்சிகரமான உதய்கிரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள், சென்சார்கள், பிளாட்பாரம் நிர்வாக திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×