search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ஒரு மாதத்திற்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 2,467 பேர் நேற்று அதன்பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 710 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளது.

    இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,569 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 14-ந்தேதி பாதிப்பு 2,858 ஆக இருந்தது. மறுநாள் 2,487 ஆகவும், நேற்று 2,202 ஆகவும் இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.

    கடந்த மாதம் 19-ந்தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. மறுநாள் 2 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 25 ஆயிரத்து 370 ஆக உயர்ந்தது.

    தொற்று பாதிப்பால் மேலும் 19 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 18 மரணங்கள் சேர்க்கப்பட்டதும் அடங்கும்.

    இதுதவிர நேற்று டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,24,260 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 2,467 பேர் நேற்று அதன்பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 710 ஆக உயர்ந்தது.

    தற்போது 16,400 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 917 குறைவு ஆகும்.

    நாடு முழுவதும் நேற்று 10,78,005 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 48 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 84.44 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 3,57,484 மாதிரிகள் அடங்கும்.

    Next Story
    ×