என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியது- பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Byமாலை மலர்13 May 2022 8:16 PM GMT (Updated: 13 May 2022 8:19 PM GMT)
இந்தியாவில் தற்போது 70,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மாநாட்டில், மாநில அரசின் ஸ்டார்ட் அப் கொள்கையை காணொலி மூலம் அறிமுக படுத்தி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கடுமையாக சாட்டினார்.
சொந்த பந்தம், கொள்கை முடக்கம் மற்றும் மோசடிகளால் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சி முடங்கியதாக பிரதமர் சூசகமாக குறிப்பிட்டார்.
முந்தைய காங்கிரஸ் அரசிடம் தெளிவான கொள்கைகள் இல்லாததால் தொழில் தொடங்குவதில் புதுமையான ஆர்வத்துடன் இருந்த இளைஞர்கள் குழப்பத்தில் ஆழ்ந்ததாக கூறினார். இதனால் ஒரு தலைமுறையின் கனவுகளை முந்தைய காங்கிரஸ் அரசு அழித்து விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
2014ஆம் ஆண்டில் நாட்டில் 300 முதல் 400வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாகவும், 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய இளைஞர்களிடையே புதுமையான உணர்வுக்கு தமது அரசு புத்துயிர் அளித்தது என்றும் அவர் கூறினார்.
யோசனை, புதுமை மற்றும் தொழில் ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தியது, முதலில், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் 70,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இளைஞர்களின் ஆற்றலால் நாட்டின் வளர்ச்சி புதிய வேகத்தைப் பெற்றுள்ளதாகவும்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருப்பதாகவும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்...
காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை- உதய்பூர் மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X