என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தினசரி பாதிப்பு 2வது நாளாக குறைந்தது- இந்தியாவில் புதிதாக 3,207 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்9 May 2022 4:27 AM GMT (Updated: 9 May 2022 4:27 AM GMT)
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 905 பேர் குணம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
கொரோனாவால் புதிதாக 3,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 3,805 ஆக இருந்தது. நேற்று 3,451 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.
டெல்லியில் புதிதாக 1,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரியானாவில் 513, கேரளாவில் 381, மகாராஷ்டிரத்தில் 224, கர்நாடகாவில் 112 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 5 ஆயிரத்து 401 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 26 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர நேற்று மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகாவில் தலா ஒருவர் என மேலும் 29 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,093 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 905 பேர் குணம் அடைந்துள்ளனர். இதில் நேற்று 3,410 பேர் அடங்குவர்.
தற்போது 20,403 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முன்தினத்தை விட 232 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 13,50,622 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 190 கோடியே 34 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 3,36,776 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.10 கோடியாக அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் புதிதாக 3,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 3,805 ஆக இருந்தது. நேற்று 3,451 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.
டெல்லியில் புதிதாக 1,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரியானாவில் 513, கேரளாவில் 381, மகாராஷ்டிரத்தில் 224, கர்நாடகாவில் 112 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 5 ஆயிரத்து 401 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 26 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர நேற்று மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகாவில் தலா ஒருவர் என மேலும் 29 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,093 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 905 பேர் குணம் அடைந்துள்ளனர். இதில் நேற்று 3,410 பேர் அடங்குவர்.
தற்போது 20,403 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முன்தினத்தை விட 232 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 13,50,622 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 190 கோடியே 34 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 3,36,776 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.10 கோடியாக அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X