search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்.ஐ.சி கட்டிடம்
    X
    எல்.ஐ.சி கட்டிடம்

    மும்பை எல்.ஐ.சி கட்டிடத்தில் தீ விபத்து- ஆவணங்கள் தீயில் கருகி நாசம்

    இரண்டாவது மாடியோடு வேறெங்கும் பரவாமல் தீ மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
    மும்பை:

    மும்பை சான்டாக்ரூஸ் பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைத்து வருகின்றன. இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 

    2-வது மாடியில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் உள்ள 'சம்பள சேமிப்பு திட்டம்' பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கணினிகள், ஆவணங்கள், மர சாமான்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. இரண்டாவது மாடியோடு வேறெங்கும் பரவாமல் தீ மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

    இந்த  தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    Next Story
    ×