
இந்தியாவில் புதிதாக 3,805 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
கடந்த 3-ந் தேதி பாதிப்பு 2,568 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4 நாட்களாக பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது.
மார்ச் 11-ந்தேதி நிலவரப்படி, பாதிப்பு 4,194 ஆக இருந்தது. மறுநாள் 3,614 ஆக குறைந்தது. அதன் பிறகு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்றைய பாதிப்பு சுமார் 2 மாதங்களில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது.
டெல்லியில் புதிதாக 1,656 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு நேற்று முன்தினம் 1,365 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
அரியானாவில் 582, கேரளாவில் 400, உத்தரபிரதேசத்தில் 320, மகாராஷ்டிராவில் 205, கர்நாடகாவில் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 98 ஆயிரத்து 743 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 20 மரணங்கள் சேர்க்கப்பட்டது. இதுதவிர கர்நாடகா, மேற்கு வங்கத்தில் நேற்று தலா ஒருவர் என மேலும் 22 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,024 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3,168 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 54 ஆயிரத்து 416 ஆக உயர்ந்தது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,303 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று முன்தினத்தை விட 615 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 17,49,063 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 190 கோடியை கடந்துள்ளது.